மருத்துவர் ஜி.’னிவாசன் மலேசிய மருத்துவத் துறையில் சேவையாற்றியதற்கு தலைவணங்குகிறோம். அவரின் குடும்பத்திற்கு நாங்கள் எங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மலேசிய வளர்ச்சிக்கு நாமும் பங்களித்திருக்கிறோம் என்பதற்கு சான்றாக இவரின் சேவையும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. 1957ஆம் ஆண்டுகளில், மலேசியாவில் உள்ள மருத்துவர்களில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் இந்தியர்களாகவே இருந்தனர். கண் பிரிவு நிபுணர் (specialist) (டாக்டர் காஷ்மின்டர் சிங்), கிட்னி பிரிவு நிபுணர் (specialist) (டாக்டர் ஜி.’னிவாசன்), குழந்தை பிரிவு நிபுணர் (specialist) (டாக்டர் அப்ரஹாம்) மற்றும் இன்னும் பல மருத்துவ பிரிவுகளை இந்திய நிபுணத்துவ மருத்துவர்கள் தோற்றுவித்துள்ளனர்.
ஆனால், 1.8 மில்லியன் இந்தியர் மாணவர்கள் 2004ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட ஒரே ஒரு மருத்துவ படிப்பு நுழைவுக்காக போராடினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணம், இபிஎப், வீடு மற்றும் நிலத்தை விற்று கிடைக்கும் பணத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று ரஷ்யா, உக்ரேன், ரோமானியா, இந்தோனேசியா, இந்தியா மற்றும் இதர நாடுகளில் மருத்துவம் பயில்கின்றனர். மலேசியாவில் 50% மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பினும் வெளிநாடுகளில் பயிலும் இவர்களின் பட்டத்திற்கு அரசாங்கத்தால் அங்கீகாரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. (உத்துசான் மலேசியா 8/10/2009 பக்கம் 24) இவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்த இந்திய மாணவர்கள் மலேசியாவில் இரண்டு வருடப் பயிற்சிக்கு அப்பாற்பட்டு கூடுதலாக ஆறு மாதக் காலம் பயிற்சிக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்களை இந்நாட்டு மருத்துவர்களாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ள முன் வரவேண்டும். தற்போது ஏற்பட்டிருக்கும் 50 விழுக்காடு மருத்துவர் பற்றாக்குறையை வெளிநாடுகளிலிருந்து மருத்துவர்களை குறிப்பாக பாகிஸ்தான், வங்காளதேசம் அதோடு சோமாலியா, சூடானிலிருந்து தருவிப்பதைத் தவிர்த்து உள்நாட்டு மாணவர்களுக்கு அரசாங்கம் வாய்ப்பளிக்க வாய்ப்பளிக்கு வேண்டும் என்று பி.உதயகுமார் கேட்டுக் கொண்டார். இவர்களுக்கு அரசாங்கம் வாய்ப்பளிக்குமேயானால் நாட்டில் 50% மருத்துவர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும்.





